திமுகவினரின் பாராட்டு எங்களுக்குத் தேவையில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கைத்தறி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் க.சுந்தர் பேசும்போது, அதிமுகவின் அமைச்சர்கள் எல்லாம் மிகவும் திறமைசாலிகள்' என்று குறிப்பிட்டார்.
அப்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு கூறியது: அதிமுக அமைச்சர்கள் மிகவும் திறமைசாலிகள் என்று குறிப்பிட்டு, திமுக உறுப்பினர் வேறு ஏதோ சொல்ல வருகிறார். எங்களுக்கு திமுக உறுப்பினர்களின் பாராட்டுத் தேவையில்லை. ஜெயலலிதாவின் மனதில் இடம்பெற்றவர்கள்தான் இங்கு அமர்ந்திருக்கிறோம். அதனால், உங்களின் பாராட்டு எங்களுக்குத் தேவையில்லை. மானிய கோரிக்கை தொடர்பாக பேசுங்கள் என்றார்.