தமிழ்நாடு
வேளச்சேரி-சென்னை கடற்கரை ரயில்கள் மதியம் இரண்டு மணி வரை ரத்து
பராமரிப்பு பணிகளின் காரணமாக வேளச்சேரி-சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மதியம் இரண்டு மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக வேளச்சேரி-சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மதியம் இரண்டு மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான தண்டவாளப் பகுதிகளில் ரயில்வே ஊழியர்கள் ஞாயிறன்று பராமரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.