ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி ரஜினிகாந்த் முதல்வராவது உறுதி என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாங்கனித் திருவிழாவின் பிச்சாண்டவர் வீதியுலாவை காண வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
நாகை மாவட்டம், பொரவாச்சேரி பகுதிக்கு செல்வதற்கு தமிழக காவல் துறையினர் அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது. மாட்டிறைச்சி விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுகிறார்.
ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி முதல்வராக தமிழகத்தில் வெற்றி பெறுவது உறுதி. மு.க.ஸ்டாலினின் முதல்வராகும் அரசியல் கனவு பலிக்காது என்றார் அர்ஜுன் சம்பத்.