சென்னை: தமிழகத்தில் தற்போது கடலூர், கொடைக்கானல், சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
கடலூர் - வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம், துறைமுகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கொடைக்கானலில் கீழ்மலை, மேல்மலை, நாயுடுபுரம், ஆனந்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான மேடவாக்கம், கீழ்க்கட்டளை, சேலையூர், தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.