சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை செவ்வாயன்று கட்சித் தலைவர் ஸ்டாலின் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இதுதொடர்பாக திமுக தலைமையகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (23.7.2019) காலை, கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, வருகிற 7-8-2019 அன்று ‘முரசொலி’ அலுவலக வளாகத்தில், திறக்கப்பட உள்ள “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழா” அழைப்பிதழை நேரில் அளித்தார்.
அப்போது சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., உடனிருந்தார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.