வேலூரில் அதிமுக வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற கட்சித் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் வலியுறுத்தினார்.
வேலூரில் அதிமுக வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்: அமைச்சர் கே.பி.அன்பழகன்


வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற கட்சித் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் வலியுறுத்தினார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள வாணியம்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம் பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வாணியம்பாடியில் வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வாணியம்பாடி தொகுதி பொறுப்பாளரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமை வகித்தார். 
வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், முன்னாள் எம்எம்ஏ கோவி.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சதாசிவம் வரவேற்றார். 
கூட்டத்தில் அமைச்சர் அன்பழகன் பேசியது:
வேலூர் மக்களளவைத் தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி பேரவைத் தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் கிராமங்கள் தோறும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வேலூர் தொகுதி தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற நமது தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், திருப்பத்தூர் ஒன்றியச் செயலாளர் செல்வம், நாட்டறம்பள்ளி ஒன்றியச் செயலாளர் எம்.கே.ராஜா, ஆலங்காயம் பேரூராட்சி செயலாளர் பாண்டியன், உதயேந்திரம் பேரூராட்சி செயலாளர் பிச்சாண்டி, திருப்பத்தூர் நகர செயலாளர் டி.டி.குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்ஸ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com