தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்த் திரைப்படத் துறையிலும், பாரம்பரிய இசைத் துறையிலும் தியாகராஜ பாகவதரின் பங்களிப்பு முக்கியமானது.
அதைப் போற்றிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும் மணிமண்டபம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தியாகராஜ பாகவதருக்கு திருச்சி மாவட்டத்தில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு நெஞ்சார்ந்த நன்றி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.