எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. 


எம்பிபிஎஸ், பிடிஎஸ் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. 
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 30-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை மூன்று நாள்கள், சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. 
இந்தக் கலந்தாய்வில், 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 146 எம்பிபிஎஸ் இடங்கள், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான 69 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா, கே.கே.நகர் இஎஸ்ஐ, தமிழக அரசு ஏற்று நடத்தும் ஐஆர்டி பெருந்துறை ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 48 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 263 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 
இதேபோன்று, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாகவுள்ள 16 பிடிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.  செவ்வாய்க்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்குமாறு 2,300 மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com