வரும் காலங்களில் காலா- 2 திரைப்படம் வர வாய்ப்பு இல்லை என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.
ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் பி-கஸ்பா பகுதியில் நூலகம் மற்றும் இரவு பாடசாலை ஆகியவற்றை வெள்ளிக்கிழமை அவர் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வரும் காலங்களில் காலா- 2 திரைப்படம் வர வாய்ப்பு இல்லை. காலா போன்ற திரைப்படங்கள் வர அதிக வாய்ப்பு இல்லை. ராட்சசி திரைப்படத்தில் ஜோதிகா நடித்து உள்ளார். அதில் வரும் டிரெய்லர் கூட அம்பேத்கர் புகைப்படத்தை மையப்படுத்தி வெளியீட்டு விழா நடந்துள்ளது. பள்ளிக் கல்வி அவலநிலைகளை வெளிப்படுத்தும் வகையில் அந்த டிரெய்லர் அமைந்துள்ளது என்றார்.
விழாவில் கவிஞர் யாழன் ஆதி, ஊரக வளர்ச்சி துறை கணக்காளர் பிரேம்குமார், மாஸ்டர் பிரான்சிஸ், நீலம் பண்பாட்டு மைய நகரத் தலைவர் சந்திரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.