சென்னை: காங்கிரஸ் பேரியக்கத்தின் சிறப்பான பணியினை மக்களின் இதயங்களை விட்டு எந்த சக்தியும் நீக்கி விட முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடாளுமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மரியாதைக்குரிய அன்னை திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள பன்முகத்தன்மை, மதசார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஏழை எளிய நடுத்தர விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கை ஆகியவற்றிற்கு நிரந்தர உத்தரவாதமாகத் திகழும் காங்கிரஸ் பேரியக்கத்தின் சிறப்பான பணியினை, இந்திய மக்களின் நல்இதயங்களை விட்டு என்றும் - எந்த சக்தியும் நீக்கி விட முடியாது.
இவ்வாறு அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.