சென்னை: செவ்வாயன்று பிறை தெரிந்ததை ஒட்டி தமிழகம், புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தில் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையானது இஸ்லாமியர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். 30 நாட்கள் நோன்பின் முடிவில் பிறை தெரிவதை வைத்துஇது கொண்டாடப்படும்.
இந்நிலையில் செவ்வாயன்று பிறை தெரிந்ததை ஒட்டி தமிழகம், புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி சலாவுதீன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டையில் ஆகிய இடங்களில் பிறை தென்பட்டது என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.