மனிதச் சங்கிலி போராட்டத்தில் மஜக பங்கேற்கும் 

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களைக் கண்டித்து நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கும் என
மனிதச் சங்கிலி போராட்டத்தில் மஜக பங்கேற்கும் 

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களைக் கண்டித்து நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை :
 காவிரி டெல்டா மாவட்டங்களையும், தமிழக கடலோரங்களையும் அழித்தொழிக்கக் கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற பேரழிவுத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது.
 பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் ஜூன் 12-ஆம் தேதி மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. இந்தப் போராட்டத்துக்கு மனிதநேய ஜனநாயக கட்சி முழு ஆதரவு அளிப்பதுடன், கட்சியின் தொண்டர்களும் திரளாகப் பங்கேற்பர் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com