சென்னை: இன்னும் சற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழும்பிய பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டம் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. இதில் முக்கியமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்ற பின்னர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்னும் சற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.