அங்கன்வாடியில் பட்டியல் இன  பெண்கள் பணியாற்ற எதிர்ப்பு: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நெருக்கடிகளுக்கு பயந்து அங்கன்வாடியில் பட்டியல் இனப் பெண்களை பணியிட மாற்றம் செய்தது ஏன் என்று கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அங்கன்வாடியில் பட்டியல் இன  பெண்கள் பணியாற்ற எதிர்ப்பு: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்


அங்கன்வாடியில் பட்டியல் இனப் பெண்களை பணி செய்ய வேறு இனத்தவர் எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே அங்கன்வாடியில் பட்டியல் இனப் பெண்கள் பணியாற்ற மற்றொரு சமுதாய மக்கள் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com