அரவக்குறிச்சி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்!

அரவக்குறிச்சி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்!

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அரவக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள  பகுதி மக்களை சந்தித்து வாக்கு அளித்தமைக்காக தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார்,  அவ்வாக்காள பெருமக்களும் “நீங்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் நிறைவேற்றியதற்காக நாங்களும் உங்களிடத்தில் நன்றி தெரிவிக்கிறோம்” என்று குறிப்பிட்டனர்.

இதை அடுத்து, இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் நிறைந்திருக்கக் கூடிய பள்ளப்பட்டியில் அங்குள்ள மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார், பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அந்த பகுதி மக்கள் தங்களுடைய குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த கூடிய வகையில் தங்களுக்கு என்று தையல் பயிற்சி மையம் ஒன்று இந்த பகுதியில் அமைத்து தர வேண்டும், அப்படி அமைத்து தரும் பட்சத்தில் எங்களின்  பொருளாதாரம் மேம்படும் என்று கோரிக்கை மனுவினை அளித்திருந்தனர், அந்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  இன்று அந்த பகுதியில் தையல் பயிற்சி மையத்தை  துவக்கி வைத்தார்.

அதன் பின்னர், அந்த பகுதியில் உள்ள எல்லாத் தரப்பு மக்களிடமும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து, ஜெயந்திநகர் அருந்ததியர் காலனியில் அந்த பகுதி மக்களையும் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, “நாடாளுமன்ற தேர்தலிலும் மற்றும்  சட்டமன்ற இடைத் தேர்தலி ஒரு மாபெரும் வெற்றியை கழகத்திற்கு தேடித் தந்ததைப் போலவே, உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர்களிடத்தில் வைத்தார்.

அதன் பின்பு தோட்டக்குறிச்சி, தவிட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் வாக்காளப் பெருமக்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com