எழுத்தாளர் அமிதாவ் கோஷுக்கு ஞானபீட விருது

பிரபல ஆங்கில எழுத்தாளர் அமிதாவ் கோஷுக்கு 54-ஆவது ஞானபீட விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் அமிதாவ் கோஷுக்கு ஞானபீட விருது வழங்கி கெளரவிக்கும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் அமிதாவ் கோஷுக்கு ஞானபீட விருது வழங்கி கெளரவிக்கும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி.


பிரபல ஆங்கில எழுத்தாளர் அமிதாவ் கோஷுக்கு 54-ஆவது ஞானபீட விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு புகழ்பெற்ற எழுத்தாளர் அமிதாவ் கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, அமிதாவ் கோஷுக்கு ஞானபீட விருதினை வழங்கி கெளரவித்தார்.
ஆங்கிலத்தில் நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள அமிதாவ் கோஷ், ஞானபீட விருது பெறும் முதல் ஆங்கில எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மிக முக்கியமான விருது தனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய அமிதாவ் கோஷ், முதல் முறையாக ஆங்கில இலக்கியப் பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com