திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.51 லட்சம் தங்கம் பறிமுதல்

மலேசியாவிலிருந்து  திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5.51 லட்சம் மதிப்புடைய தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 


மலேசியாவிலிருந்து  திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.5.51 லட்சம் மதிப்புடைய தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை வந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த அகமது பாஷா(27) என்பவர் தனது உடலில் மறைத்து ரூ. 5.51 லட்சம் மதிப்புடைய தங்க நகைகளை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தங்க நகைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அகமதுபாஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com