மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 722 கன அடியாகச் சரிந்தது.
காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த லேசான மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 100 கன அடியிலிருந்து படிப்படியாக உயர்ந்து நொடிக்கு 930 கன அடி வரை அதிகரித்தது. தற்போது காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது. புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 722 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 45.53 அடியாகவும், நீர் இருப்பு 15.11 டி.எம்.சி.யாகவும் இருந்தது.