சென்னை மாவட்டத்தில் மட்டும் அங்கீகாரமின்றி 331 பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
331 பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பெற்றோர் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம்பெறாத பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர், இந்த பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.