திருமயம் அருகே 16-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை திருமயம் அருகே பேரையூர் கிராமத்தில் 16-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள்
திருமயம் அருகே 16-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை திருமயம் அருகே பேரையூர் கிராமத்தில் 16-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திருமயம் அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலின் அருகே முத்தையா என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அப்பகுதியில் மரம் வெட்டி நிலத்தை சமன்படுத்தும்போது ஒரே இடத்தில் 16-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து தோண்டியபோது ஐம்பொன் சிலைகள் வெளிப்பட்டது. அதன்பிறகு அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். மேலும், அப்பகுதியில் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com