உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் வேனும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர். 
உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் வேனும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பால் மாவட்டத்தில் உள்ள லக்ரபன் கிராமத்தில் நேற்றிரவு வேனும், சரக்கு வாகனமும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனிடையே உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com