முதல்கட்ட விசாரணை நடத்தாமல் ஸ்தபதி முத்தையா மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாயமான வழக்கில் முதல்கட்ட விசாரணை நடத்தாமல் ஸ்தபதி முத்தையா மீது வழக்குப்பதிவு செய்தது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
முதல்கட்ட விசாரணை நடத்தாமல் ஸ்தபதி முத்தையா மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மயில் சிலை மாயமான வழக்கில் முதல்கட்ட விசாரணை நடத்தாமல் ஸ்தபதி முத்தையா மீது வழக்குப்பதிவு செய்தது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சந்நிதியில் உள்ள மயில் சிலை மாயமானது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர்  வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக  தலைமை ஸ்தபதி முத்தையா கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 
இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்தபதி முத்தையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. 
வழக்கை விசாரித்த நீதிபதி, 14 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்கு, எந்த அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, முதல்கட்ட விசாரணை நடத்தப்படாமல் ஸ்தபதி முத்தையா மீது வழக்குப்பதிவு செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். 
மேலும் இந்த வழக்கின் முழுமையான விசாரணைக்குப் பிறகு, ஸ்தபதி முத்தையா குற்றவாளி என நிரூபிக்க எந்தவிதமான ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றால், அவரைக் கைது செய்தது தவறாகி விடும் அல்லவா என கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கை உள்ளிட்ட விவரங்களை வரும் ஜூலை 7-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். அதுவரை இந்த வழக்குத் தொடர்பான குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com