அரசு மருத்துவமனையில் முதல் முறையாக  8 திருநங்கைகள் பணி நியமனம்

முதல் முறையாக அரசு மருத்துவமனையில் 8 திருநங்கைகள் காவலர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.   அவர்கள் அனைவரும் தஞ்சாவூர்


முதல் முறையாக அரசு மருத்துவமனையில் 8 திருநங்கைகள் காவலர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.   அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சீமாங்க் திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் மகப்பேறு மருத்துவப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 
 இவர்களுக்கு பணியாணை வழங்கப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை புதன்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், இணைச் செயலாளர் நடராஜன், ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா ஆகியோர் உடன் இருந்தனர்.
 திருநங்கைகள் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு பெற்று வருவது அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே காவல்துறையில் திருநங்கைகள் பணி வாய்ப்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது  சுகாதாரத் துறையில் காவலர்களாக, அரசு பொது மருத்துவமனையில் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com