கூட்டத்தை அடுத்து கே.எஸ்.அழகிரி, செய்தியாளர்களிடம் கூறியது: உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுகிறோம். எங்கள் கூட்டணி சிறந்த கூட்டணி. நல்ல புரிதல் இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து எந்த வகையிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறதோ, அதன் அடிப்படையில் தேர்தலைச் சந்திப்போம்.
அண்டை மாநில முதல்வர்களை தமிழக முதல்வர் சந்தித்து தண்ணீர் கேட்க வேண்டும். 2 டிஎம்சியோ, 5 டிஎம்சியோ கிடைக்கும். முதல்வராக கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருந்த காலங்களில் இப்படிப் பெற்றுள்ளனர்.
வறட்சியைச் சமாளிக்க மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுள்ளார். இப்படிக் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துதான் கேட்க வேண்டும் என்றார் அழகிரி.