ஜூலை 8 முதல் 15 வரை அரசுப் பள்ளி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணிமாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணிமாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  
 பணி மாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்கள், விண்ணப்பங்களை ஜூன் 28-ஆம் தேதிக்குள் கொடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  ஜூலை 8-ஆம் தேதி வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. 
இதைத் தொடர்ந்து ஜூலை 9 முதல் 15 வரை தொடக்கப் பள்ளி, நடுநிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.  இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.  
முன்னதாக இந்தக் கலந்தாய்வு ஜூன் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் பணிகள் காரணமாக கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com