பொதுப்பணி-நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை: முதல்வர் இன்று ஆய்வு

பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக, துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
பொதுப்பணி-நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை: முதல்வர் இன்று ஆய்வு


பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக, துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
 தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் துறையின் செயலாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். துறை வாரியாக மானியக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்து நிதிகளைப் பெறுவதற்காக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில், மானியக் கோரிக்கைகளின்போது எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர்.
முதல்வர் ஆய்வு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது வசமுள்ள பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் துறை தொடர்பாக அந்தத் துறைகளின் உயரதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை செயலாளர், நெடுஞ்சாலைகள் துறை செயலாளர், இரண்டு துறைகளைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கொள்கை விளக்கக் குறிப்புகளை இறுதி செய்வது, முக்கிய திட்டங்களின் நிலைமைகள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com