மழை பெய்ய வேண்டி, பள்ளிப்பாளையம் ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
மழை பெய்ய வேண்டி, கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு யாகம் நடத்துமாறு முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வரும், கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவித்ததை அடுத்து இக்கோயிலில் காலை 11 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மின்சாரம்- மதுவிலக்கு, ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பி.மணிராஜ், எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.