கோவை, பேரூர் பட்டீசுவரர் கோயிலில் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மழை வேண்டி சனிக்கிழமை யாகம் நடைபெற்றது. மாவட்டச் செயலரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் 40 வகையான தானியங்களை வைத்து வருண பகவானை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. யாகத்தை அடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
இந்த யாகம் நிச்சயம் பலன் தரும். தமிழகத்தில் விரைவில் மழை பெய்து மக்கள் பயனடைவார்கள். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவதால் ஜோலார்பேட்டை பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றார் அமைச்சர்.