குடம் இங்கே! குடிநீர் எங்கே? மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டம்

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
குடம் இங்கே! குடிநீர் எங்கே? மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்ப்பாட்டம்

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன், எம்எல்ஏ அன்பழகன், வி.பி.துரைசாமி மற்றும் பெண்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் பங்கேற்றனர்.

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி சேப்பாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

குடம் இங்கே! குடிநீர் எங்கே? என ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு தீர்க்க வேண்டும். அதிமுகவினர் மழைக்காக யாகம் நடத்தவில்லை. தங்களது பதவியை காப்பாற்றவே யாகம் நடத்துகின்றனர். 

தண்ணீர் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வராவிட்டால் சிறைச்சாலை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். குடிநீர் பிரச்சனை திடீரென வந்தது அல்ல, இது குறித்து முன்கூட்டியே சட்டப்பேரவையில் எடுத்துரைத்தேன். ஆனால், அதிமுக அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் எல்லாவற்றிலும் பஞ்சம் உள்ளதை போல, தற்போது தண்ணீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்போது என்னை ‘நல்லாட்சித் துறை’ அமைச்சர் என்றே அழைப்பார்கள். 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com