காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் லேசான மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 282 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இது புதன்கிழமை காலை நொடிக்கு 271 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடி நீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை காலை 44.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 44 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 14.24 டி.எம்.சி.யாக இருந்தது.