கொடநாடு கொலை வழக்கு: சயன், மனோஜ் கேரளாவில் கைது 

கொடநாடு கொலை வழக்கில் சயன், மனோஜ் ஆகிய இருவரையும் கேரளாவில், தமிழக போலீசார் இன்று கைது செய்தனர்.
கொடநாடு கொலை வழக்கு: சயன், மனோஜ் கேரளாவில் கைது 

கொடநாடு கொலை வழக்கில் சயன், மனோஜ் ஆகிய இருவரையும் கேரளாவில், தமிழக போலீசார் இன்று கைது செய்தனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில், கடந்த 2017-ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  இந் நிலையில், கொடநாடு சம்பவம் தொடர்பாக தெஹல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர்  மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த ஆவணப்படத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சயன் மற்றும் மனோஜ் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக சில கருத்துக்களைத் தெரிவித்தனர்.  இதைத் தொடர்ந்து, சயன், மனோஜ் ஆகியோருக்கு எதிராகப் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  

இந்த வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், சயன்,மனோஜ் ஆகிய இருவருக்கும் உதகை நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சயன், மனோஜ் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், சயன், மனோஜ் மீது கேரளத்தில் கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந் நிலையில், மேத்யூஸ்சாமுவேல் என்பவரது ஆவணப்படத்தில் கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக பேட்டி அளித்துள்ளனர். அந்தப் பேட்டியை எடுத்த மேத்யூசாமுவேல், பீகார் எம்.பி.யையும், கேரளத்தின் தலைமைச் செயலாளரை மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழக முதல்வருக்கு எதிராக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால், இவர்களுக்கு மீண்டும் ஜாமீன் வழங்க முடியாது என்பதைக்  கருத்தில் கொண்டே உதகை நீதிமன்றம் சயன், மனோஜ் ஆகியோருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்துள்ளது.

எனவே, மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த உதகை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார்.  இதை எதிர்த்து, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கைத் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக அண்மையில் ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் கொடநாடு கொலை வழக்கில் சயன், மனோஜ் ஆகிய இருவரையும் கேரளாவில், தமிழக போலீசார் இன்று கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com