சென்னை: திமுக கூட்டணியில் இணையும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இணையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் திருமாவளவனும், மு.க. ஸ்டாலினும் கையெழுத்திட்டு பரஸ்பரம் ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டனர்.
இதுவரை திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், முஸ்லிம் லீக் கட்சி மற்றும் கொமதே கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.