மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவது தொடர்பாக தேமுதிகவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் நிலையில், விஜயகாந்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சந்தித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு இன்று மாலை வந்த துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், விஜயகாந்துக்கு பொன்னாடை போர்த்தினார்.
இல்லத்துக்கு வந்த ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரை சுதீஷ் வரவேற்றார்.
அதிமுக - தேமுதிக கூட்டணியில் இன்னும் இழுபறி நீடித்து வரும் நிலையிலும், நாளை தேமுதிக உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையிலும், விஜயகாந்த் - ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நிகழ்ந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.