
தமிழகத்தில் எத்தனை மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கையின்படி 2020க்குள் முழுமையாக மதுக்கடைகளை மூட உத்தரவிடக்கோரி காந்திராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்தில் எத்தனை மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன? ஆலைகள் தயாரிக்கும் மது பானங்களில் எவ்வளவு மதுபானங்கள், டாஸ்மாற்கிற்கு விநியோகம் செய்யப்படுகிறது? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும் இதுதொடர்பாக ஒருவாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.