அதிமுகவில் மீண்டும் கே.சி.பழனிசாமி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி. பழனிசாமி மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் மீண்டும் கே.சி.பழனிசாமி


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி. பழனிசாமி மீண்டும் அக்கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக வெள்ளிக்கிழமை இணைந்தார்.
அதிமுகவின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவரான கே.சி.பழனிசாமி, கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவராவார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் கட்சி வட்டாரத்தில் அதிகாரம் பொருந்திய நபராக இருந்து வந்தார். 
இந்நிலையில்,  அதிமுகவின் கொள்கைகள், குறிக்கோளுக்கும் முரண்பாடாக செயல்பட்டதாகக் கூறி பழனிசாமியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக கட்சித் தலைமை கடந்த ஆண்டு அறிவித்தது.
இதையடுத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அவர் விலகியிருந்தார். இந்தச் சூழலில், அவர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் பழனிசாமி கட்சியில் இணைந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com