புது தில்லி: தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஞாயிறன்று தில்லியில் வெளியிட்டார்.
அதன்படி நாடு முழுவதும் எழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டாவது கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
அவரது அறிவிப்பின்படி தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அட்டவனை விபரங்கள் வருமாறு:
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாள்: 19.03.2019
வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்: 26.03.2019
வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் நாள்: 27.03.2019
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: 29.03.2019
வாக்குப் பதிவு: 18.04.2019
வாக்கு எண்னிக்கை நடைபெறும் நாள்: 23.05.2019
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட காரணத்தினால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றது.