பொள்ளாச்சி விவகாரத்தில் கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சனிக்கிழமை தெரிவித்தார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் தந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை வெளியிட்டதாக எஸ்.பி.பாண்டியராஜன் மீது புகார் அளித்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ,
கோவை எஸ்.பி.பாண்டியராஜன் மீது நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நடவடிக்கை எடுக்கலாம். அது தொடர்பாக அறிக்கை அளித்தால் போதுமானது என்று தெரிவித்துள்ளார்.
அதுபோன்று பாஜக அளித்த புகாரின் பேரில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடர்பாக சென்னை தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.