நியூஸிலாந்து மசூதியில் நடைபெற்றற துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் இன்று தனது டுவிட்டர் பக்க பதிவில், உலகின் இரண்டாவது அமைதி நிறைந்த நாடான நியுசிலாந்தில் மசூதிக்குள் நுழைந்து குழந்தைகள் உள்ளிட்ட 49 இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் படுகொலை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை.
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த இரு இஸ்லாமியர்கள் காயமடைந்ததாகவும், 9 பேரைக் காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்த இருவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.