நியூஸிலாந்து தாக்குதல்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

நியூஸிலாந்தின் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார்.
நியூஸிலாந்து தாக்குதல்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் புகுந்து மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 49 பேர் உயிரிழந்தனர். 48 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நியூஸிலாந்தின் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com