ஈரோட்டில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணேசமூர்த்தி யார் தெரியுமா? 

மக்களவைத் தோ்தலில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் அ. கணேசமூா்த்தி போட்டியிடுவார் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ
ஈரோட்டில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணேசமூர்த்தி யார் தெரியுமா? 


சென்னை: மக்களவைத் தோ்தலில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் அ. கணேசமூா்த்தி போட்டியிடுவார் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்களவைக்கான 17-ஆவது பொதுத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று கூறியுள்ளார். 

திமுகவிலிருந்து பிரிந்து வைகோ மதிமுகவைத் தொடங்கியபோது அவரோடு சென்ற கணேசமூர்த்தி, மதிமுகவில் மாவட்டச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்து, தற்போது அக் கட்சியின் பொருளாளராக இருந்து வரும்கிறார். 1989-இல் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1998-இல் பழனி மக்களவை உறுப்பினராவும், 2009-இல் ஈரோடு மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

ஈரோடு சென்னிமலை அருகே உள்ள குமாரவலசு என்ற கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி, சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர். 1984-இல் திமுக மாவட்டச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com