ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி: வைகோ அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று, அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி: வைகோ அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவார் என்று, அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
 மக்களவைக்கான 17-ஆவது பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக அ. கணேசமூர்த்தி போட்டியிடுவார் என அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
 வேட்பாளர் விவரம்: அ.கணேசமூர்த்தியின் சொந்த ஊர் ஈரோடு சென்னிமலை அருகே உள்ள குமாரவலசு. பிறந்த தேதி 1947 ஜூன்10. சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்துள்ளார்.
 1984-இல் திமுக மாவட்டச் செயலாளராக இருந்தார். திமுகவிலிருந்து பிரிந்து வைகோ மதிமுகவைத் தொடங்கியபோது அவரோடு சென்றார். மதிமுகவில் மாவட்டச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்து, தற்போது அக்கட்சியின் பொருளாளராக இருந்து வருகிறார். 1989-இல் மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினராகவும், 1998-இல் பழனி மக்களவை உறுப்பினராகவும், 2009-இல் ஈரோடு மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
 2014-இல் ஈரோடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அவரது மனைவி பாலாமணி காலமாகிவிட்டார். தமிழ்பிரியா என்ற மகளும், கபிலன் என்ற மகனும் உள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com