மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அறிவித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வேல்முருகன் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, அவர் கூறியது: மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடப் போவதில்லை. திமுக கூட்டணியை மக்களவைத் தேர்தலில் கட்சி ஆதரிக்கிறது என்று தி. வேல்முருகன் தெரிவித்தார்.