மக்களவைத் தேர்தலின்போது, மாவட்டங்களில் எழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் திமுகவில் தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில், மக்களவைத் தேர்தலில், மாவட்டங்களில் எழும் பிரச்னைகள் குறித்து தலைமைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு தீர்வு காணவும், தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளைத் தலைமைக் கழகம் சார்பில் கவனிக்கும் வகையிலும், என்.ஆர்.இளங்கோவின் தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.