சென்னை: தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தனிச் சின்னத்தில் போட்டியிடப்போவதாக அக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தான் போட்டியிடுவதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தனிச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இருந்து நல்ல பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார்.