பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவரின் பெயரை மாவட்ட எஸ்.பி. வெளியிட்டது விமர்சனத்துக்கு ஆளான நிலையில் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடக்கூடாது என்று அனைத்து காவல் ஆணையர்கள்,மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
முன்னதாக, பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் தந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை வெளியிட்டதாக எஸ்.பி.பாண்டியராஜன் மீது புகார் அளித்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ,
கோவை எஸ்.பி.பாண்டியராஜன் மீது நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நடவடிக்கை எடுக்கலாம். அது தொடர்பாக அறிக்கை அளித்தால் போதுமானது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.