மக்களவைத் தேர்தல் ஆதரவு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களவை தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஒருவாரத்தில் அறிவிப்பேன். மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் என்னை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. அவர் என்னை சந்தித்து ஆதரவு கேட்டால், பின்னர் முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.