ராமநாதபுரம் அருகே ரூ. 1.35 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 1.35 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  
ராமநாதபுரம் அருகே ரூ. 1.35 லட்சம் பறிமுதல்


ராமநாதபுரம் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 1.35 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  

பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலைகளில் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில் பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை காலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். ராமநாதபுரம் அடுத்த நதிப்பாலம் பகுதியில் அவர்கள் வாகனச் சோதனையின் போது, அந்த வழியாக வந்த காய்கறி வியாபாரி கார்த்திக் குமார் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ. 1.35 லட்சம் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவுமில்லை.  இதைத்தொடர்ந்து பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து அதிகாரிகள் மாவட்டம் முழுவதும்  கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com