மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் தேர்தல் அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கை குறித்து கே.எஸ்.அழகிரி

மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் தேர்தல் அறிக்கை என்று திமுக தேர்தல் அறிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். 
மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் தேர்தல் அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கை குறித்து கே.எஸ்.அழகிரி

மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் தேர்தல் அறிக்கை என்று திமுக தேர்தல் அறிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிடுகிறது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் திருவள்ளூர்(தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 நாடாளுமன்ற தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. 

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி கூறுகையில்,
திமுக தேர்தல் அறிக்கை தெளிவாக உள்ளது, மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் தேர்தல் அறிக்கை. மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிக்கப்படுவர். 

காங். தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும், விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com