அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்: திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருத்தம்

அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்: திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருத்தம்


அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகையான பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: விவசாயிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்போர் சிறு, குறு விவசாயிகள் ஆவர். இவர்களின் பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. அதை மாற்றி, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தற்போது அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com