திமுக கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி க்ரிஷ்ணமூர்த்தியை ஆதரித்தும் திருப்பத்தூரில் முதல்வர் பிரசாரம் செய்து வருகிறார்.
அப்போது பேசிய அவர், திமுக வெளியிட்டுள்ளது பொய்யான தேர்தல் அறிக்கை, அதிமுக தேர்தல் முத்து முத்தான அறிக்கை முழுவதும் நிறைவேற்றக்கூடியது. திமுக கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி.
மத்திய நிலையான ஆட்சியை அமைக்க அதிமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிரதமர் வேட்பாளர். நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப் போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.